My Blog List

Saturday, March 6, 2010

மூங்கில்


வாசம் ஒன்று என்
வாசல் வரைவந்து தீண்டியது

தென்றல் என்
கன்னம் தொட்டுப் பேசியது

காதல் ஓசை
மெல்ல மனசைக்குழைக்க

அது
நீண்ட தென்றலாகி

ஒரு அழகான
குழலிசையாகவே இருக்க

மூங்கிலில் பட்ட புண்ணாய்
என்னுள் ஒரு பிரதிபலிப்பு

இசையாய் அணைகையில்
மூங்கில்

நெருப்பில் காய்ந்தது
நெஞ்சில் சுட்டது

எல்லா சந்தோஷங்களுக்கும்
முன்ஓடினால் மிகுவலி தெரிகிறது

புல்லாங்குழலான மூங்கிலைப்போல்.

No comments: