My Blog List

Saturday, March 27, 2010

ஆர்த்மாத்தமான உயிருடன்

எத்துணை வேசங்களால் மறைந்தாலும்
நாமனைவருமே ஏங்கிக்கொண்டிருப்போம் -நம்மையும்
ஆர்த்மாத்தமாய் நேசிக்கக்கூடிய ஓருயிர்
உலகில் இருக்கக்கூடுமா.................?.........

ஆனால்
ஆர்த்மாத்தமான ஓருயிர்
எனக்காய் உண்டென
உணர்கிறேன் நான் !!

உனை என்னவென்று செல்வது
எண்ணும் போதெல்லாம் வந்துவந்து போகிறாய்
எதனால் ?......................
தோன்றும் போதே மறைந்து போகிறது.

என்னையும்..................
என் கவிகளையும் அழகாக்கியவன் நீ
என் கவிகளினுள்ளேயுள்ள
உயிர்த்துடிப்பை உணர்த்தியவன்.

நான் படிகளில் தடுக்கிய வேளைகளிலெல்லாம்
தானாக வந்து தாங்கியவன்
தவறானவற்றை மறுத்தவன்-நான்
நிறைவான போது உயிரைமட்டும்நேசித்தவன்.

உலகம் எனை ஏசியபோது
எனை ஏந்தியவன்- அதே
உலகம் எனை ஏந்தியபோது
ஒதுங்கி நின்று ரசித்தவன் நீ.

ஆர்த்மாத்தமாய் ஒர் உயிர்
எனக்காகவும் உளது -அதுநீயாய்
அறிகிறேன். -நான்
இறந்த பின்னும் உணர்வுடன்.

உன்அந்த ஒரேயெரு கண்ணிர்த் துளிபோதும்
எனக்கான ஆர்த்மாத்தமான ஆன்மாவாய்
என் கல்லறையிலும் உனை
உணர்வேன்- நேசிக்கும் உயிர் நீயென.

உனக்கான ஆத்மாத்தமான ஓருயிர்
உலகில் இருக்குமா............................?
உனக்கு எப்போதாவது எண்ணத்தோன்னினால்- அது
நான் தானென உணர்த்த விரும்புகிறேன்.

இப்படிக்கு
-நான்.

No comments: