My Blog List

Saturday, March 27, 2010

நான் பார்த்ததேயில்லை

மாச் கடைசி
மக்கள் கூட்டம் மிதப்பது
மறுக்கமுடியாத ஒன்று
மெற்றாசில்,

ஆனாலும் இன்று
மிதமிதமாய்க் கூட்டம்
பட்டாசுவெடிகளுடன் வீதிகளில்
பறந்தன காகிதத்துகள்கள்.

படித்த நோட்டுக்களை
கிழித்து பறக்கவிட்டு
வானில் துள்ளிக் குதித்து
குதூகலித்தனர் சந்தோஷத்தில்.

பிளஸ் 2 எழுதியவரும்
ரெந்துப் பரீட்சைமுடித்த மாணவருமாய்
வீதியில் கூடி
விதவிதமாய் கும்மாளம்

பரீட்சைமுடிந்ததில்
என்ன ஒரு சந்தோஷம்
இப்படி நான் பார்த்ததேயில்லை
அப்பப்பா காதுகிழிகிறது பட்டாசில்.

No comments: