My Blog List

Saturday, March 27, 2010

கலப்பிலொரு இன அழிப்பு....

பசிக்கழுகிறது ஒருபிள்ளை
பள்ளிக்கழுகிறது மற்றொன்று
கொடுக்க இயலாமல்
மறுகும் தாய் கற்பை
கெடுக்கத் தயாராகிறது
அரசுக்கூலி......

புதிய சட்டங்கள்
குறித்த மண்
கதவுகட்கு தமிழ்க் கதவுகட்கு
தாழ்நீக்கம் செய்தல்
அந்தி சாய்ந்த பின்னும்
அடைத்தல் தடைச்சட்டம்

மெய்தீயிலிட்டு தமிழின்
மெய் தீட்டென ஆடையவிழ்த்து...
அவன் அம்மணத்தில்
சிம்மனங்கள் குதிக்குமிக்
கோரகோரம் முன்னொரு
சரித்திரத்தோடு சாகவில்லை....

No comments: