My Blog List

Wednesday, June 27, 2012

நிர்வாணமே!

வார்த்தைகளில் குற்றம் 
வறுமை அன்பிலா
வறண்டு போய் ரத்தம்
உறுள்கிறது நெஞ்சக்குள்

ஒப்பனைகள் எதற்கு
உரித்துப் போட்ட
உன் வார்த்தைகளைத் தான்
நேகிக்கிறேன்

வா
எனை நிர்வாணமாய்
நேசித்துப்பார்
என் குற்றங்களைக் களைந்தெறிந்து

இப்பொழுது
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
நீ தரவேண்டிய முத்தி
நிர்வாணமே!


நிர்வாணமே!

Monday, March 21, 2011

மீண்டுமொரு நாட்குறிப்பு



நீயென்பது

நீணட பயணமென்பது புரிகிறது
உள்ளங்கைக்குள்

துயர் குடித்த நாட்களை மருவி
நான்கு நாட்குறிப்பின் பயணத்தில்
நனைந்து உப்பி
நீண்ட பயணமென்றிருந்தவுன்னை
நான்கு நாட் குறிப்போடு
கிழித்துப் போடமுடியவில்லை
வெறும் பயணச்சீட்டாய்

காதல் கவிதைகள்
எழுதுவதில்லையென பிரகடனங்கள்
கொடுத்த பின்பு
எப்படி வரைவதுனக்காய்.....

முன்னைய தோற்றுப்போன
உணர்விழந்த காதலோடு
எடுக்கப்பட்ட பிரகடனங்களின்
மீழ்நிலைகள் குறித்த
முடிவுகளுக்கான முன்னறிவுப்புகளுக்கு முன்பே
முன்மொழியப்பட்டிருக்கிறாய்
உள்ளுணராமலே என்
நான்கு நட்குறிப்பிற்காய்
வரைபட

இப்பொழுது
காதல் கவிதைகள் பற்றிய
சத்தியங்கள் சாத்தியமற்றதாக
உன்னைப்படிக்க ஒருமுறை துணிகிறேன்

உன்நகையணிந்தாய்
புன்னகையாய் சத்தமற்று
புதியயுத்திகள் காதலுக்கு எதற்கு
பழையதோடானதல்லோ இது
பருவம் பிந்திய மழையாய்
பயிரழிந்ததுபோல் உடனிருந்தென்
உயிரழிக்க

மூன்று முன்கிழிந்த பின்
இன்னுமொன்றாய்
வெறும் அமிலத்தின் நுரைகளாய்
காற்றுவாக்கில் கரைத்து விட்டாய்
காதல் சுவாசித்த களப்பை
கருகி நிக்க
வாழைத்துண்டங்களாய்
விறைத்த நிறுவல்களோடு

இன்னுமொரு நாட்குறிப்பு
இடமுடியுமெனத்தோன்றவில்லை
ஏனெனில்
வளரும் மூங்கிலோ
வளரவிருக்ககும் மாவோ அல்ல

உலுப்பி விடப்பட்ட கிழைகளையுடைய
உதிர் காலத்தின் ஆசை
புரிந்திருப்பின் உன்னாசை
என்னாசை புரியாதிருப்பின்

மீண்டுமொரு நாட்குறிப்பு
இம்மடலோடிட தூண்டுமென்பது
என் மனசு நீ நோக்கி
உன் வீச்சில் வீழ்வது
இன்னுமொரு
தாழோ? நாளோ?

Saturday, March 5, 2011

ஏமாற்றம்

எனக்காய் உன் அழைப்புகள்
எதுவுமே இன்னும் வரவில்லை
ஏமாற்றம்
உன்னாலான ஏமாற்றம்
அப்படியிருக்க முடியாதிது
உன்னைத் தொலைத்து
உன்னுள் தொலைந்து
மீழ முடியாததின்
வலியாகத்தான் இருக்க முடியும்
காரணம் நான் இறக்கப்பட்டதன்
காரணம் நீயென்பதன்
ரகஸ்சியம் உடைந்ததின்
ஏமாற்றம் உனை
இறக்கடித்துக்கொண்டிருப்பதே !

மாசியில் ஒரு மகிழ்ச்சியான மாலைப்பொழுது....



ஒரு நாளை அழகான மாலைப்பொழுதாக அமைக்கமுடிந்தது இவர்களால் எழுத்தாளர் மதுமிதா, வசுமதி, உஷா , தேனம்மை , கவிதா, ஸாதிக்கா, யசோதாஎன்கின்ற சாரதா இவர்களுடன் நானும்இணைந்தருந்தேன். இவர்களில் எனக்கு ஏற்கனவேஅறிமுகமானவர் தேனான தேனம்மை மட்டுமே, கள்ஒத்த இவர் பேச்சில் களவாடிய உள்ளம் பல.நான்உட்பட. எப்பொழுதும் ஓர் அசாதாரண புன்னகையைஒட்டிக்கொண்டிருந்தார் மதுமிதா, நான் இருப்பதைஎப்பொழுதும் மறக்கக் கூடாது எனும்படியாகஉணர்த்தியபடி உஷா
ராமச்சந்திரன். எப்பொழுதும் போல் மௌனமான புன்னகையோடு வசுமதி வாசன், அவரைப்போலவே அழகாய். ஸாதிக்காவின் ரகஸ்ய சமயல் குறிப்புகளோடு தொடங்கி அஞ்சறைப்பொட்டியின் ரகஸ்சியத்தைப் போட்டுடைத்தார் எனக்கு தன்னுடைய எழுத்துக்களோடான ஈடுபாட்டைப் பற்றிப் பேசினார். வரையறைகளோடு இருக்கவேண்டிய முகப் புத்தக நேரங்களையும் சுட்டினார், பெரும்பான்மையானவர்களின் ஆமோதிப்புக்களோடு அவர் பேச்சுக்கள் தொடர்ந்தது. எனக்கு அவருடைய கலாச்சார விடையங்களோடான சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தன.

வேறு ஓர் கருத்தரங்கிற்காக சென்றிருந்தாலும் இனிமையான சில அறிமுகங்களோடு அமைந்தமை மனதிற்கு மகிழ்ச்சியே. கடைசியாக வந்து இணைந்து கொண்டார்கள் கவிதாவும் சாரதாவும். சிரிப்பு என்பது நித்தம் என் இதழ்களில் தவழ்வதற்கே என்பதைப்போல் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார் கவிதா, அருமை. அதிசயம் ஆனால் உண்மை நானும் மதுமிதாவும் சந்தித்துக்கொண்டால் அது நிச்சயம் இந்த ஆண்டிற்குரிய மகாநாடாகத்தான் இருக்க முடியும், வலைப்பூவில் எழுதி புத்தகம் போட்ட முதல் நபர் நானாகத்தான் இருக்கமுடியும் எனவும் சுவாரஸ்யமாய் இருந்தது உஷாவின் உரையாடல். மதுமிதா எப்போதும் ஒரு அவதானத்தினூடே தன் பேச்சை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது அதில் கவனம் மிகையாகவே இருந்தது.

இப்படி ஓர் அருமையான பொழுதில் பங்குகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தார் தேனம்மை
தேனம்மாவிற்கு நன்றியுடன்
ஈழவாணி.

Sunday, February 6, 2011

தியாகச்சுடர்கள்

நீங்குமா நினைவு நின்று
நீங்கள் தின்ற சுடர்த்தீயின்
தாகம் தணிந்த பின்னும்
நீங்காது நீளும் உங்கள் நினைவாலே
எம்மாலயம் மனவாலயம் நிகர்க்கடவுளராய்

எம் தமிழோடு தமின தேசமும் எரியக்கண்டு
உம்தேகம் தீய்த்து தீர்வெழுத முயன்ற
தியாகச் செம்மல்களே!

அடிகொண்ட தமிழ் தேசம் சிதைவுண்ட சேதிகண்டு
சிதை கொண்டாயோ முத்துக்குமரா!
முத்தளிக்கும் உன் மூச்சை எம்
மிச்சத் தமிழினம் வாழ துச்சமாய் துறந்து
உச்சியில் அடித்தாயோ தமிழ் நாட்டின்
உணர்வுச்சியில் அடித்தாயோ,

அறிக்கைவிட்டு அழுதுடைக்கும் வெளிவேச
செய்தி கொண்டு பார்த்து உடன்
ரசித்து மென்ற பெருந் தலைகட்கு
உன்னதமென்றோ உன் செயல்
உணர்வுகளைப் பிடுங்கும் தீரமல்லோ

ஈழத்தமிழ் வாழ்வு துடிக்க உன்
சிந்தையில் எந்தையர்கள் உந்தையர்களாக
மிளிரட்டும் வாழ்வென
சிதை கொண்டாயோ முத்துக்குமரா
முப்புரத்தீயை மேனியில் ஏற்றி
உலக நீதி கேட்டாயே!
எம் தமிழர் உயிர் வாழ
நியாயங்கள் வேண்டுமென்று
நீத்தாயோ உயிர்த்தீயை தீய்த்து.

அடங்காத்தமிழரை அடக்கி ஒழிக்க நினைத்த
சிங்கள ஆதிக்கமே வெறும்
சிதைகள் அல்ல இவைகள்
ஓடி ஓடி நீ எங்கே
ஒழியப் போகிறாய்!
எம்மவர்க்காய் பதினொன்பவரும்
மேனியில் ஏந்திய தீ உன்
தீட்டெரிக்கும் விரைவரையும்
விரைந்தெழுந்து கொண்டிருக்கும்
தியாகங்கள் முன்னால் - எம்
தாயகம் ஒளிரும்

சிங்கள ஏகாதிபத்தியத்தின்
ஏப்பங்கள் தின்று தீர்த்த எம்
தேசங்கள் சாவிலே
படைபிடித்த போரிலே
நிலம் இழந்தோம் நிற்கதியானோம்
புலங்கள் தாண்டி
புதிய தலங்கள் ஏதுமின்றி
ஏதிலியாய் நடக்கையிலே
சேதி தேடி உம் செவிப்பறை எரித்ததோ
ஐயா அப்துல் ராவூப்தரே
தமிழ் நாட்டில் எம் துயர் எரிக்க
உயிர் எரித்தாயோ
முதல்மகனே உயர்மகனே

கள்வனாய் வந்திறங்கி
பிறமுதுகாடி எம்மண்ணை
உறவாடி ஊரழித்து தமிழழித்து
அவர்தம் உயிர் குடித்த
ரத்தக் காட்டேறிகளாய்
ஊழிப் பேய்களாய் - ஊர்
பிணம் தின்னும் சிங்களமே உன்
பிண நாற்றமறுக்கவோ எம்
குருதி குடித்து குடித்து
குதித்துக் கழிக்கிறாய்

யாரிடத்தை யார் தொடுவது
வந்தேறு குடிகளாய்
வந்தேறிய கூட்டம் நம்
தாயகத்தைத் தரமறுப்பதோ!
யார் கொடுத்ததிதை காடையர்க்கென
தீக்குழித்தாயோ வளவா
சென்னையின் எழில் வளவா
வாழாமல் போனாய் தீயாய் உன்
தியாகத்தை நிரூபித்தாய்
சுடராக ஒளிர்கிறாய் நிச்சயமாய்
சுதந்திர ஒளிர்வின் ஒளியில்
சுடரப்போவது உன் ஒளியோடே

சிவகாசியின் மாரிமுத்து ஐயனே
சிவந்து கிடந்த எம் மண்ணின்
குரதியீரம் மறைக்கவோ நீ மறைந்தாய்
தீயுள் உன் மேனிகொண்டு

வடுக்கள் கண்டு வதைந்து துவண்டு
தாங்கிய தமிழரில்
ஈழத்தமிழரின் துயரில்
அடுக்காதோ நீயும்
தீவைத் தெரிந்தாய் தியாகியே
புதுக்கோட்டையின் பால சுந்தரனே
எம்மக்கள் கண்ணீர்
காணாதோடிடும் என நினைத்தாயோ நீ
இன்னும் காணவில்லையே
நம்முறவுகளை சொந்தங்களை
வழி நெடுக வீசியெறிந்த பிணங்களை
கணங்கள் தாண்டி பிணமாகியே நடையோடு
பீடை கொண்டோமே இன்னும்
பிறிதொரு மலர்வு தோன்றவில்லையே?

குலைக் குண்டுகள் கொண்டு
நிலைகொண்ட தமிழ் தேசங்கள்
நிலமோடெரிந்த நிலை பொறுக்காது
சிதையேகி நின்றீரோ – எம்
சிதையோடு சிறை கொண்ட வாழ்வை
உலகிற்கு உரையேற்ற நினைத்தீரோ
விடுதலை விளிம்புகள்
தொட்டநிலை வேரோடறுத்தனரே
உலக வல்லரசு வல்லூறுகளோடு
வலை போட்டு நம் தமிழரை
ஈனமாய்க் கொன்றதை
உணர்வலை வீசிநீ
ஜெனிவாவில் உணர்த்தவோ
உடலெரிந்து சாம்பலானாய்
அவலங்களின் குரல்கள் உன் காதில்
அதிரவதிரத் தின்றாயோ தீயை
வீரனே!! உன் தீரம்
தீயாய்க் காட்டத்தான்
சென்றாயோ முருகதாசா
முயன்று எழுந்தாயோ எம் துயரம் சொல்ல
உன் தியாகம் எம் நெஞ்சில் தீயடா
தீராத எம் தாயக தாகத்தில் நீ திரியற்ற தீபமே
சாகவில்லை உன் நினைவுகள்
சயனப்பட்டுப் போகாது நம் தமிழினம்

ஆர்ப்பரித்த ஓரினத்தை
அழிக்க நினைத்தீரோ
வரலாறு கொண்ட
வாழ்வாங்கு வாழ்ந்த தமிழனத்தை
தமிழ் மண்ணில் பிரித்தீர் அழித்தீர்
தீயிட்டுக் கொழுத்தி
சாம்பலையும் கரைத்தீர்
கரைந்தது நீரிலல்ல
தமிழர் கண் கொண்ட நீரிலே

நிறுத்து நிறுத்தென
நித்தம் போராடிய குரல்களின்
குரல்வளைகள் பிடிங்கிப் போட்டு
விழிபிடுங்கி வீசிய வீணங்களின்
ஆதிக்க அராஜகம்
அடக்க நினைத்தனரோ
இவர்கள் தம்முணர்வு கூறி நம்
துயரங்கள் தாங்காது
தேசங்கள் கடந்த தேசங்களில்
அக்கனியால் ஆணையிட்டனரோ

ஐயா எம் தியாகச் சுடர்களே
ஒலிக்கிறதையா உம் மன
ஓலங்கள் இதயங்களில் எம்
அவலங்கள் அடக்கவன்றோ
ஓவியமானீர்கள் தீயெழுதி நீர்
வரைந்த தீக்கோடுகள் நம்
தமிழீழத்தை வெளிச்சத்தில் காட்டுமைய்யா

எம் நாடு எரிந்த தீயை நீ ஏந்தினாயோ
அயலூரின் ராசசேகரனனே
மாண்ட மொழி கேட்டதோ
மலேசியாவில் ஸ்ரீபன் ஜெகதீசனே
ஐயா ராசாவே
பாய்ந்து வீழ்ந்த குண்டுகளில்
நீத்த உயிர்கள் அலறியதோ
பள்ளப்பட்டியில் ரவி ஐயனே
சீர்காழியில் சிதை தின்ற ரவிச்சந்திரனே
எம் சோகம் உம் சிந்தையில் எரிந்ததோ
தீ அமரமேகினீரோ அமரேசா
தீய்த்துக் கொண்டிருந்த தமிழீழத்திற்காய்

தமிழ் வேந்தரே சென்னை சிவப்பிரகாசமே
உமக்கு சிவந்தமண்ணின் சோகம்
அக்கினியில் அருளியதோ
சீனிவாசா, கோகுலரத்தினா
சுப்பிரமணியே சிவானந்தனே
நீவீர் எல்லாம் தீயின் மைந்தர்களோ
அனலிடை அழித்தீரோ ஆகுதியை
வேகும் எம் உயிர் நிலைகள் உலகேகும் என்று
வந்தனரைய்யா பெருந்தலைகள்
பிணங்கள் பாத்தனரய்யா
காணொளியிலும் கண்டனர்
பரிதாபம் கொண்டனர்
அறிக்கைகளும் தந்தனர்

ஒரு சுந்தர பூமி
சுடுகாடாயிருக்க ஆங்கே
சாம்பல்களில் தமிழர் பேரெழுதியிருக்க
கூடுகளும் குவிந்திருக்க
குதிக்கிறது ஊழிப்பேய்கள்
இடையிடை உம் தியாகம் எம்
இருளதை மறைக்க
இன்னும் நடைப்பிணமாய் நடையேகிறோம்
எம் தாயகம்,
தமிழர் பூமியாகும் ஓர் நாளில்
அங்கு நீவீர்
தீச்சுடராய் நிச்சயம் ஒளிர்வீர் .









Friday, January 28, 2011

முத்துக்குமரா....


முத்துக்குளித்து ஜென்மசுகமாய்
முயன்று முயன்று வேஷங்களில்
மூழ்கி வாழுமிவ்வுலகில்
தீக்குளித்து நீ
ஈழமுத்தெடுக்கத் துணிந்தாயே
முத்துக்குமரா....

தூத்துக்குடியின் துயராகி
தூயனெனத் தீயெரித்து
நீயெரிந்தாய்
தீயெரியும் ஈழத்தமிழ்
துயரெரிக்க முயன்றோ
முத்துக்குமரா.....

எம் தமிழ் ஈழத்தின்
தூண்டா விளக்காய்
தீக்குள் சுடராய் ஒளிர்கிறாய்
இன்னும் எம்முள்
இதய தீபமுமாய் நீ
முத்துக்குமரா.

Saturday, November 6, 2010

இராவனேஸ்வரன்


கவிச் சக்கரவர்தமே பொய் புகன்றதுமேனோ நீ ?


இராமனைத் தெய்வமாக்கவே
இராவணனை கொடுங்கோணாக்கினாய்..?

கோவிலுக்கோர்
உருத்தோவையன்றோ
கொற்றவன் மகனே மட்டுமானவனுக்கு
கோதாண்டம் கொடுத்தாய்....?

இராம தூதக்குரங்கிற்கு
நினைத்ததும் நிழும் மகிமை
நிச்சய முன் கவி கற்பித்ததன்றி
வேறிருக்க முடியுமோ ?

கம்பரே, காவியம்படைத்தீர் அதில்
காழ்ப்புணர்ச்சி ஏன் கொண்டீர்..?
திராவிடத் தலைவனை
தீட்டுடையோனாக்கியதேன் ?

புத்திரசோகத்தில் திழைத்த உமக்கு,
புத்திரசோகமுடைய தசரதன்
பத்தரைமாற்றாய் தெரிந்தானோ..?
பாதகம் செய்தீரோ தமிழ்மன்னனுக்கு..

பொங்கும் கவி நீ
புதுப்புவிக் கவி நீ எனவெல்லாம்
புகழப்பெற்ற கவிச்சக்கரவர்தியே
பொய் புகன்றதும் ஏனோ நீ..?



சீதைக்கும் சிறந்திருப்பான் ராவணன்.....


சீதைக்கும் ராவணன்
சிறந்திருந்தான்........

அழகிய தேசமொன்றை
அக்கினி மூட்டியழித்து
அடங்காக்கிரமம் பண்ணி
அழைத்து வந்து தன்னை

ஊருக்கும் உறவுக்கும்
ஊறற்றவளெனத் தன்னை
உத்தமியாய்க் காட்ட
தீ க்குள் தள்ளியவேளை....

ராவணன் உயர்ந்திருப்பான்
ராமனை விட அவள்மனதில்
சிறைப்பிடித்தும் கண்ணியங்காத்த
அவனெங்கே.......

தீக்குள் தள்ளியெனை
தீண்டவில்லை இவள் கற்பை
மாற்றானென மற்றவர்க்காய்
மார்தட்டும் இவனெங்கே யென.....

குடியான ஒருவன்
குடியுளறலில் புகன்ற
சொற்கேட்டுத் தன்னை
புக்கம்விட்டுத் துரத்துகையில்

சீதை சிரம்தாழ்த்தியிருப்பாள்
ராவணனின் சீர் குணத்திற்காய்
பெண்மையைப் போற்றத் தொரிந்த
பெருமகன் அவனென.....


அரக்கர் என்றால்- அழகரோ?

அரக்கர் என்றால்
அழகரே?

சிவனின் மைந்தனோ
இவன் சிந்தித்தானாம்
அனுமன்,
இராவணன் மகன்
இந்திரஜித்தின் அழகில்
மயங்கி

பின் அந்த அனுமன்
மண்டோதரியைக் கண்ணுற்று
இவர் தனோ சீதையெனசிந்தித்தானாம்.

மகிழ்சியாய் அவர் இருந்தைமையால்
துன்புற்றல்லோ சீதையிருப்பார்?
எனத்தெளிந்தானாம்.

அப்படியெனில்
பேரழகியான சீதையோடு
மண்டோதரியின் அழகும் சிறந்ததாகிறதே- பின்

அரக்கரென்பதேன்
அழகில் சிறந்தோர் என்பதினாலோ?
அரக்கர் என்றால் அழகரே............?


இவர்கள் இன்று அகதியாம்

அளகாபுரி அமராவதியிலும்
இலங்காபுரி சிறந்ததாம்
வால்மீகி கூறியிருக்கிறார்.

திராவிட நாகரீகம் சிறப்புற்றிருந்தது
அளகாபுரியில், அதைவிட திராவிடம்
இலங்காபுரியில் சிறந்ததாம்.

வால்மீகி இலங்காபுரியை
சுந்தர காண்டத்தில் கூறினார்- பின்னதன்
சிறப்பைக் கூறவும் வேண்டுமோ?

அனுமன் வியந்தானாம்,
சிறப்புக்கு சீர்தூக்கிறார்களே
கவிகள் அளகாபுரியையும், அமராவதியையும்!

இலங்காபுரியை அறியவில்லையே
இவர்கள் -அறிந்திருந்தால்
அதிசிறந்தது இதுவன்றல்லோ கூறியிருப்பர். -என

அனுமன் கண்ட இலங்காபுரி
ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைப்போல்,
அழகிய நகராயிருந்ததுவாம்.

இவ்வாறு சிறந்திருந்த நம்
இலங்கையில்-திராவிடம் வாழ்ந்த
இலங்கையில்-

"இவர்கள் இன்று அகதியாம்".