சில கனவுகட்காய்
நிழல் தேடும்
உணர்வுடைந் தீர்ந்திட
இவ்வளவே.....!! எனும்.-பின்னும்
கனவோடு மட்டும் உயிராடும்......
♀
""சதைப்பிண்டங்கட்கு
பின்னொரு
சடலமாய் சாவோ ஓம்".
()
கண்டுகொள்ள முடியாத கனவு,
வெளிக்குத் தொரியாத விபசாரம்,
ஓசையின்றிக்கடிக்கும் நாகம்
நீண்டுகொண்டிருக்கும் நீநீநீநீநீநீநீநீநீ.
***
முள்ளி வாய்க்கால்
முள்ளி வாய்க்கால்
வீரமா விவேகமா ?
துயரமா துரேகமா ?
யார் யாரிடம் கேட்பது...........?
யாரிருப்பர் இன்னும் மீதமாய்..............!!
♐
மெட்டவிழ்த்த வண்டே,
கள் உண்டதின் போதினில்
கொட்டிய வலியால்,
ஒட்டிக்கொண்டிருக்கும்
எட்டியதண் மலர்வை,
பட்டுக் காயப்போகதே..........
~
காலங்கள் கதைகட்காக
காத்திருப்பதில்லை,
சிலவேளைகளில்
மொழிந்த மொழி
மௌனமாய்......
புதைந்து விடுகின்றன...!!!!!
*
ஏய் பூவே,
கார்த்திகைப் பூவே,
எங்கே மறைந்து போனாய்......?
எம் தேசம் இரத்த பூமியாய் கிடக்கிறதே - நீயும்
மண்ணில் விழுந்து மடிந்ததாலோ.................?