My Blog List

Monday, March 21, 2011

மீண்டுமொரு நாட்குறிப்பு



நீயென்பது

நீணட பயணமென்பது புரிகிறது
உள்ளங்கைக்குள்

துயர் குடித்த நாட்களை மருவி
நான்கு நாட்குறிப்பின் பயணத்தில்
நனைந்து உப்பி
நீண்ட பயணமென்றிருந்தவுன்னை
நான்கு நாட் குறிப்போடு
கிழித்துப் போடமுடியவில்லை
வெறும் பயணச்சீட்டாய்

காதல் கவிதைகள்
எழுதுவதில்லையென பிரகடனங்கள்
கொடுத்த பின்பு
எப்படி வரைவதுனக்காய்.....

முன்னைய தோற்றுப்போன
உணர்விழந்த காதலோடு
எடுக்கப்பட்ட பிரகடனங்களின்
மீழ்நிலைகள் குறித்த
முடிவுகளுக்கான முன்னறிவுப்புகளுக்கு முன்பே
முன்மொழியப்பட்டிருக்கிறாய்
உள்ளுணராமலே என்
நான்கு நட்குறிப்பிற்காய்
வரைபட

இப்பொழுது
காதல் கவிதைகள் பற்றிய
சத்தியங்கள் சாத்தியமற்றதாக
உன்னைப்படிக்க ஒருமுறை துணிகிறேன்

உன்நகையணிந்தாய்
புன்னகையாய் சத்தமற்று
புதியயுத்திகள் காதலுக்கு எதற்கு
பழையதோடானதல்லோ இது
பருவம் பிந்திய மழையாய்
பயிரழிந்ததுபோல் உடனிருந்தென்
உயிரழிக்க

மூன்று முன்கிழிந்த பின்
இன்னுமொன்றாய்
வெறும் அமிலத்தின் நுரைகளாய்
காற்றுவாக்கில் கரைத்து விட்டாய்
காதல் சுவாசித்த களப்பை
கருகி நிக்க
வாழைத்துண்டங்களாய்
விறைத்த நிறுவல்களோடு

இன்னுமொரு நாட்குறிப்பு
இடமுடியுமெனத்தோன்றவில்லை
ஏனெனில்
வளரும் மூங்கிலோ
வளரவிருக்ககும் மாவோ அல்ல

உலுப்பி விடப்பட்ட கிழைகளையுடைய
உதிர் காலத்தின் ஆசை
புரிந்திருப்பின் உன்னாசை
என்னாசை புரியாதிருப்பின்

மீண்டுமொரு நாட்குறிப்பு
இம்மடலோடிட தூண்டுமென்பது
என் மனசு நீ நோக்கி
உன் வீச்சில் வீழ்வது
இன்னுமொரு
தாழோ? நாளோ?

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
அழகு தமிழ்.
வாழ்த்துக்கள் அம்மா.

முல்லை அமுதன் said...

vaazhthukkal.
mullaiamuthan.